0

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் இது. இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்.


வாட்ஸ் அப் செயலியின் அதிவே வளர்ச்சியால் பேஸ்புக் அந்த நிறுவனத்தை வாங்கி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது பற்றி கடந்த பதிவொன்றில் பார்த்தோதற்பொழுது அந்த செயலியில் கூடுதலாக வாய்ஸ் காலிங் வசதியும் கொடுக்கபட உள்ளது.

Voice Calling வசதி தரப்பட்டால் மொபைல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கடும்.

வாய்ஸ் கால் செய்ய இணைய இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு பேசலாம். இதற்கு போன் பில் எதுவும் கட்டவேண்டியதில்லை. வழக்கமாக இணையப்பயன்பாட்டுக்கு ஆகும் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

டெக்ஸ்ட் மெசேஜ்களை இலவசமாக பறிமாறிக்கொள்வதைப் போல, இனி இந்த வாட்ஸ்அப் செயலிமூலம் குரல் அழைப்புகளை ஏற்படுத்தி, உலக நண்பர்களுடன் பேச முடியும்.

இந்த வசதி எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.

முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப் செயலியின் வாடிக்கையாளர்கள் இருமடங்கு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Post a Comment

 
Top