0
கனடாவில் முளைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிதியின் கீழ் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ள அதன் பிரச்சார இணையத்திற்கு சிறீலங்கா ஜனாதிபதி, ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 





முன்னாள் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியரும் வடக்கு முதலமைச்சர் கனவிலிருந்து தூக்கி வீசப்பட்டவருமான வித்தியாதரனிற்கு புத்துயிர்ப்பு வழங்கவே கூட்டமைப்பின் கனேடிய கிளை பெருமளவு நிதியினை அள்ளி வழங்கியுள்ளது.

நேற்று யாழில் இடம்பெற்ற இணையத்தள ஆரம்ப நிகழ்வில் பல்வேறு பத்திரிகையாளர்கள் அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த டக்ளஸ் மற்றும் கொலைகளை வழிநடத்திய ஜெகன் எனப்படும் குகனேந்திரன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தி இனப்படுகொலையை நடத்திய மகிந்த ஆசீர்வதிக்க கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு இணையத்தளமென கூறப்பட்டால் அதன் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளது.



இது தொடர்பாக முகப்புத்தகத்தில்....,

பரபரப்புக்குப் பஞ்சமேயில்லாத யாழ்ப்பாணத்து ஊடகப் பரப்பில் புதிதாக மலர்ந்திருக்கிறது "மலரும்.கொம்" என்ற புதிய செய்தி இணையம். அதன் பிரதம ஆசிரியராக இருந்து வழிநடத்துபவர் முன்னாள் உதயன் பத்திரிகையின் ஆசிரியர். சீ.என்.வித்தியாதரன்.



ஏற்கனவே ஊடகத்துறையிலும், புதிதாக இப்போது தமிழ்த் தேசிய அரசியலிலும் சல சலப்புக்களுக்குக் காரணமாகிப் பேசப்பட்டு வந்தவர் வித்தியாதரன். மலரும்.கொம் மலர்வின் மூலமும் பேசு பொருளாக மாறியிருக்கின்றார்.

இன்றைய திறப்பு விழாவுக்கு "கொலைகார" அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து மாலை மரியாதைகளை வழங்கி விட்டு டக்ளஸ் தனக்குத் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னதாக செய்தி வெளியிட்டுத் துரோகிக்கு மகுடம் சூட்டிய செய்தியை இருட்டடிப்புச் செய்திருக்கிறார்.



இந்த அறிமுக நிகழ்வுக்காக மாவை சேனாதிராஜாவுடன் வந்திருந்த இவரது மைத்துனர் உதயன் சரவணபவன் டக்ளசைக் கண்டதும் வாசலோடு திரும்பிப் போய்விட்டார். ஏற்கனவே உதயன் பத்திரிகையிலிருந்து வித்தியாதரன் விலகிய விடயத்தில் சர்ச்சைக் குறைவில்லாமல் பேசப்பட்டு வருகிறது. 


இவரது இணைய ஆரம்பம் அவரது பத்திரிகையில் செய்தியாகிமை இதமான மாற்றம் என்று மூத்த இதழியலாளர் Janakeswaran அவர்கள் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்தளவுக்குப் பேசப் பட்ட விடயத்தைப் போட்டு உடைத்து விட்டார் வித்தியாதரன்.



கொழும்பில் வித்தியாதரன் கடத்தப்பட்ட சமயம் வெளியில் வந்ததில் இருந்து, உதயன் ஆசிரிய பீடத்திலிருந்து வித்தியாதரன் வெளியேறியமை உட்பட அத்தனையும் "றோ" வினால் அரங்கேற்றப்பட்ட நடகங்கள் என்பது ஊரறியாத விடங்கள்

அத்துடன் அந்தச் செய்தி இணையம் இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதல்ல 29.05.2012 இல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் பொருத்தமான சமயம் பார்த்து இன்று பதிவேற்றப்பட்டிருக்கிறது. ஜெனிவாவில் தமிழர்களுக்கான குரல் எழுப்பப்படும் வேளையில் திசை திருப்பலுக்காகத் திட்டமிட்டு உருக்காட்டப்பட்டிருக்கின்றது.

இன்றைய மற்றுமொரு விருந்தினரும், பலரையும் விழி திரும்பச் செய்திருக்கின்றது. அவர் வேறு யாருமல்ல இந்தியத் துணைத் தூதுவர் மகாலிங்கம் தான் அவர். ஏற்கனவே இந்திய உளவு அமைப்பான "றோ" வின் பரவலாக்கத்துக்கு அரும்பாடுபட்டமைக்காக அவருக்குப் பதவியுயர்வுடனான இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசோடு இன்று மகாலிங்கம் தோளில் போட்டபடி வந்தமை வித்தியாதரனை வினாக் குறியாக மாற்றியிருக்கின்றது.

அவை அனைத்தின் அடிப்படையிலும், வித்தியாதரன் யாரால், என்ன நோக்கத்துக்காக, வழிநடத்தப்படுகிறார் என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றன.

ஏற்கனவே தமிழ்த் தேசிய அரசியலில் இவரை நுழைக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர்களின் புத்திசாலித் தனமான காய் நகர்த்தலினால் தோற்றுப் போய்விட்ட "றோ" இப்போது இவரை வைத்துப் புதிய வியூகம் ஒன்றினை வகுக்க முயற்சிக்கிறது.

இவர் ஆசிரியராக இருந்த காலத்தில், இவரது அலுவலகத்துக்குள் புகுந்து சுட்டும், எரித்தும், கொலைத் தாண்டவம் ஆடிய டக்ளசோடு புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதனை வெளியில் காட்டாமல், புலத்தில் இருக்கும் தமிழர்களை வழிநடத்துவதற்கான முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே பாராளுமன்றக் கதிரைக்கான கனவும், மாகாண சபைக்கான ஆசையும் நிறைவேறாத நிலையில், புதிய வியூகம் பற்றி விழிப்பாய் இருப்போம்...

Post a Comment

 
Top