0
உள்­நாட்டு யுத்­தத்­திற்­கான அடிப்­படைக் கார­ணங்­களை கண்­ட­றிந்து அவற்றை நிவர்த்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதால், இலங்­கையில் மேலும் வன்­முறைச் சம்­ப­வங்கள் நிக­ழக்­கூ­டிய ஆபத்­தொன்று ஏற்­ற­பட்­டுள்­ள­தென கனடா எச்­ச­ரித்­துள்­­ளது.



நியூ­யோர்க்கில் உள்ள கனே­டிய தூத­ர­கத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற கூட்­ட­மொன்­றி­லேயே இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தாக மத்­தியூ ரசெல் இன்னர் சிற்றி பிரஸில் தான் எழு­தி­யுள்ள விரி­வான அறிக்­கை­யொன்றில் குறிப்­பிட்­டுள்ளார்.


அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, இரா­ணு­வத்­தி­னரால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றமை குறித்த செய்­தி­களை ஐ.நா. வுக்­கான இலங்­கையின் பிரதி வதி­விடப் பிர­தி­நிதி சவேந்­திர சில்வா மறுத்­துள்­ள­தா­கவும் குறித்த சில அமைப்­புக்கள் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களைப் பரப்பி வரு­வ­த­னையும் வேறு­பட்ட அமைப்­பு­களால் அவை இடித்­து­ரைக்­கப்­பட்டு இலங்கை குறித்து தவ­றான அபிப்­பி­ரா­ய­மொன்றை தோற்­று­விற்று வரு­வ­த­னையும் உதா­ர­ணப்­ப­டுத்­தினார்.


மேற்­படி அமர்வில் கனே­டிய வதி­விடப் பிர­தி­நிதி கிலர்மோ ரிஷ்­சின்ஸ்கி உரை­யாற்­று­கையில், உள்­நாட்டு யுத்­தத்­திற்­கான அடிப்­படைக் கார­ணங்­களை அறிந்து அவற்றை நிவ­ர்த்திசெய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எதுவும் உகந்த முறையில் எடுக்­கப்­ப­டா­ததால் இலங்­கையில் மேலும் வன்­முறைச் சம்­ப­வங்கள் நிக­ழக்­கூ­டிய ஆபத்து நிலை காணப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்தார். 


குறிப்­பாக மனித உரி­மை­க­ளுக்­கான ஐ.நா. உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்­ளையின் விஜயத்தையடுத்து சிவில் சமூகத்தினர் சதா தொந்­த­ர­வு­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்­தமை குறித்து அவர் வருத்தம் தெரி­வித்தார்.


மேற்­படி அமர்வில் நோர்வே, அமெ­ரிக்கா, பிரத்­தா­னியா, நைஜீ­ரியா, ஜப்பான், பாகிஸ்தான், மொன்­டினெக்ரோ மற்றும் தென்­னா­பி­ரிக்கா ஆகிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர். 


இது குறித்து தென்­னா­பி­ரிக்க பிர­தி­நிதி கருத்துத் தெரி­விக்­கையில், அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களைத் தீர்­மா­னிக்கும் பொருட்டு மேற்­படி கவலை தரும் விட­யத்தை தமது தலை­ந­க­ருக்கு தெரி­யப்­ப­டுத்தபோவ­தாகக் கூறி­யுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top